பெரியார் எதிர்ப்பு ஏன் ??
பெரியார் எதிர்ப்பு ஏன் ?? பெரியார் இறந்து 44 வருடங்கள் ஆனாலும் அவரை பற்றிய எதிர்ப்பு பிரச்சாரம் அரங்கேறிக்கொண்டேவருகிறது .ஆம், பெரியாருக்கு எதிர்ப்பு இல்லையென்றால் தான் ஆச்சிரியப்படவேண்டும்.பெரியார் சுயமரியாதை இயக்கம் எதிர்ப்பில்தான் ஆரம்பித்தார் .அவர் சென்ற இடமெல்லாம் எதிர்ப்புதான் .அவர் பேசிய வார்த்தைக்கெல்லாம் எதிப்புதான். அவரின் வாழ்க்கை எதிர்ப்பில் தொடர்ந்தது. இந்த எதிர்ப்பு பிரச்சாரம் பெரியாரை பலருக்கு அறிமுகப்படுத்திருக்கும். யாருடா இந்த தாடி கிழவன் என்று அவரை பத்தி படிக்க ஆரம்பித்து பெரியாரை புரிந்துகொண்டவர்கள் பலர் .பெரியாரை எதிர்ப்பவர்கள் வெறும் கற்பனை கதைகளை புனைந்து பேசுவது அவரை படித்தவர்களுக்கு புரியும் .பெரியாரின் கூற்றை நேரிடைய எதிர்க்க திராணி இல்லாதவர்களே இப்படி கற்பனை கதைகளை புனைந்து பேசி மொக்கை வாங்கி கொள்வார்கள் .இறுதி மூச்சு அடங்கும் வரை மூத்திர சட்டியுடன் பெரியார் மக்களைச் சந்தித்துப் பேசிக்கொண்டே இருந்தார். அவர் வாழ்ந்த காலம் 94 ஆண்டுகள், 3 மாதங்கள், 7...