Posts

Showing posts from September, 2017

சுயசாதி ஒழிப்பே சாதி ஒழிப்பின் முதல் படி

சாதி பற்றி பேசாமல் இருந்தால் அது தானாகவே ஒழிந்துவிடுமாம் தம்பிகள் சொல்கிறார்கள் .பாசமிகு , தம்பிகளா சாதி என்பது நம்மிடையே காணப்படும் புற்றுநோய். இந்த புற்றுநோய்க்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்படவேண்டும்.அதற்கு இந்நோயைப்பற்றி, இதன் கொடுமையை பற்றி பேசித்தான் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். வருங்கால சந்ததினர்காவது இந்த நோய் பரவாமல் தடுப்பதே நம் அனைவரின் கடமையாகும் .மற்றவரின் நோய்யை கண்டு எள்ளி நகையாடுவதை விட, நம்மிடம் உள்ள புற்றுநோய்க்கு சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். ஏனென்றால் சுயசாதி ஒழிப்பே சாதி ஒழிப்பின் முதல் படி .சாதிய புற்றுநோய் சிகிச்சைக்கு பெரியார், அம்பேத்கர் போன்ற சமூக மருத்துவர்களை படிப்பது அவசியமானது .